பொதுமக்கள் அவதி

Update: 2026-03-08 13:31 GMT

சேலம் அம்மாபேட்டை மண்டலத்துக்குட்பட்ட 33-வது வார்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாக்கடை கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித பலனும் இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடித்து சீரான குடிநீர் வழங்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்