வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் கிராமத்தில் சாலையில் குளம் போல் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் இந்தவழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கழிவு நீர் தேங்கியுள்ளதால் நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி உள்ள கழிவுநீரை அகற்றி, மீண்டும் கழிவுநீர் தேங்காமல் இருக்க உடனடியாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.