கழிவுநீரை அகற்ற வேண்டும்

Update: 2022-09-24 11:50 GMT

ஆம்பூர் பெத்லகேம் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும். ஓரிரு நாட்களுக்கு பிறகு நகராட்சி நிர்வாகம் மழைநீரை அகற்றி விட்டு சுத்தம் செய்யும். ஆனால், தற்போது மழையில்லாத நேரத்திலும் கூட கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடாக உள்ளது. அதில் துர்நாற்றம் வீசுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.

-வெங்கடேஷ், ஆம்பூர்.

மேலும் செய்திகள்