திருவண்ணாமலையில் மீர்பாஷா தெருவில் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டதால், கம்மங்கொள்ளை தெரு சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீரால் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ளது. மேற்கண்ட தெருவில் கால்வாய்களை தூர்வார மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.ஜாபர்பாஷா, திருவண்ணாமலை.