மதுரை மாநகராட்சி அனுப்பானடி 89-வது வார்டு சூசை மைக்கேல் தெரு 2, 4-வது சந்தில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. எனவே சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.