விருதுநகர் மாவட்டம்,வெம்பக்கோட்டை வட்டம் ஆலங்குளம் முதல்நிலை ஊராட்சி மத்திய கூட்டுறவு வங்கிக்கு செல்லும் வெம்பக்கோட்டை முக்கிய சாலையின் இருபுறமும் கடந்த சில நாட்களாக கழிவுநீர் அதிகளவில் வெளியேறுகின்றது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகின்றது. மேலும் இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் வெளியேறும் கழிவுநீரை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.