பழனி நகராட்சி 12-வது வார்டு ராஜாஜி சாலை, பழைய தாராபுரம் சாலை ஆகிய பகுதிகளில் சாக்கடை கால்வாய் பாலம் அமைக்கும் பணி முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாய் பாலப்பணிகளை முறையாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.