ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை சீனிதெருவில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் கழிவுநீர் வெளியேறி தெருவில் தேங்குகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைந்து தூர்வார வேண்டும்.