தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-08-24 18:16 GMT

 ஈரோடு சோலார் பகுதியில் உள்ள பாலுசாமி நகரில் தார்சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் சாக்கடை கால்வாயையொட்டி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே பாலுசாமி நகருக்கு தார்சாலை வசதி ஏற்படுத்தி தரவும், கால்வாயை சுத்தம் செய்து கழிவுநீர் செல்லவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்