கம்பம் நகராட்சி 3-வது வார்டு உலகத்தேவர் தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் வெளியேறி தெருவில் தேங்குகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைந்து தூர்வார வேண்டும்.