திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் பாரதிதாசன் நகர் 8-வது தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் தூர்ந்துபோன நிலையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழி இன்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலை தூர்வாரி சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.