பவானி நகராட்சி 1-வது வார்டில் உள்ள கால்வாய் நீண்ட நாட்களாக சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் ஓடும் அவலநிலை உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதேபோல் சாலை வசதியின்றியும் தவிக்கிறார்கள். எனவே அடிப்படை வசதிகள் செய்துதர அதிகாரிகள் முன்வர வேண்டும்.