கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி சுருளி அருவி சாலையில் சாக்கடை கால்வாய் பணிகள் நடைபெறுகிறது.இந்த பணிகள் மந்தமாக நடைபெறுவதால் கழிவு நீர் சாலையின் குறுக்கே செல்கிறது. இந்த கழிவு நீரால் சாலையில் செல்பவர்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கழிவு நீர் சாலையில் செல்வதை பேரூராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும்,சாக்கடை கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.