ரிஷிவந்தியம் ஒன்றியம் முட்டியம் கிராமத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.