வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் பின்புறம் கரூர்- கோவை தேசிய நெடுஞ்சாலை அருகில் கழிவு நீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று ஏற்படும் முன் சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.