நசியனூர் பள்ளிபாளையம் பகுதியில் சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் விஷஜந்துகள் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஊர்ப்புற நூலகம் மற்றும் பால் பண்ணைக்குள் புக வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.