கங்காபுரம் டெக்ஸ்வேலி பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையின் பக்கவாட்டில் உள்ள சாக்கடை கால்வாய் மூடி உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் கால்வாய் சரியாக மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் சேதமடைந்து கிடக்கும் மூடியில் மோதி விபத்துகளில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே கால்வாய் மூடியை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.