கம்பம் காந்திசிலை அருகே தியாகி வெங்கடாசலம் தெருவில் உள்ள சாக்கடை கால்வாய் தண்ணீர் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்ததால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே தரைப்பாலத்தை விரைந்து சீரமைக்க வேண்டும்.