கம்பம் அருகே எம்.சுருளிப்பட்டி 11-வது வார்டு பகவதி அம்மன் கோவில் தெருவில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் முன்பு குழி தோண்டி அதில் கழிவுநீர் சேகரிக்கப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த குழிகளில் இருக்கும் கழிவுநீர் வெளியேறி தெருவில் தேங்குகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாய் வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.