தியாகதுருகம் அருகே தியாகை ஊராட்சி சிறுவல் கிராமத்தில் உள்ள கால்வாய் நிரம்பி கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துா்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளதால் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்துவதோடு, கால்வாயை தூர்வாரி கழிவுநீர் வெளியேராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.