கழிவுநீர் கால்வாய்க்கு மூடி அவசியம்

Update: 2024-07-07 18:17 GMT

தாரமங்கலம் பஸ் நிலையம் அருகே ராஜவாய்க்கால் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாய் திறந்த வெளியில் உள்ளதால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் தவறி விழும் அபாய நிலையில் உள்ளது. ஆடி மாதம் பண்டிகை நடைபெற உள்ளதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலுக்கு வந்து செல்வார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் உண்டாகும். எனவே சாக்கடை கழிவுநீர் கால்வாய்க்கு அவசியம் மூடி அமைத்து தந்தால் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும்.

மேலும் செய்திகள்