தூர்வாரப்படாத கழிவு நீர் வாய்க்கால்

Update: 2024-05-12 12:41 GMT

திருச்சி மாநகராட்சி 40-வது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் கூத்தப்பார் ரோடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலை ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் கடந்த ஓராண்டுக்கு மேலாக தூர்வரப்படாமல் உள்ளதால் தற்போது தூர்ந்துபோன நிலையில் கழிவுநீர் செல்ல தடை ஏற்பட்டு உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்