சுகாதார சீர்கேடு

Update: 2024-05-05 12:49 GMT

ஊட்டியில் உள்ள ராணுவ வீரர்கள் நல அலுவலகம் அருகே கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால் சாலையோரத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் அங்கு வந்து செல்வோருக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்கு கழிவுநீர் கால்வாய் அமைத்து, சுகாதாரத்தை பேண சம்பந்தப்பட்ட துறையினர் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்