கால்வாயை சீரமைக்க வேண்டும்

Update: 2024-04-14 16:52 GMT

திண்டுக்கல் அனுமந்தநகர் மேம்பாலத்தின் இருபுறமும் குறுகலான சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகளை ஒட்டியபடி கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயின் மேல்பகுதி சிமெண்டு சிலாப்புகள் மூலம் மூடப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் நடைபாதையாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்த சிமெண்டு சிலாப்புகள் சேதமடைந்து மோசமான நிலையில் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் கால்வாய் மீது நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த கால்வாயை சீரமைக்க வேண்டும்.




மேலும் செய்திகள்