மதுரை பி.பீ.குளம் போலீஸ் குடியிருப்பு பகுதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு உள்ளது. கழிவுநீர் தேங்கி வாகனஓட்டிகள், நடைபாதையினருக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. இதனால் இவ்வழியே கடந்து செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.