புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2024-04-07 10:29 GMT

சிவகிரி நகராட்சி அம்பேத்கர் தெற்கு தெரு பகுதியில் உள்ள வாறுகாலில் கழிவுநீர் வழிந்தோட வழியின்றி தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது என ஆனந்தி பிரகாஷ் என்பவர் அனுப்பிய பதிவு `தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரம் ஆனது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்