கழிவு நீர் வாய்க்கால் பள்ளம் மூடப்படுமா?

Update: 2024-03-10 16:59 GMT
வாணாபுரம் அருகே வடகீரனூர் கிராமத்தில் கழிவுநீர் செல்ல வாய்க்கால் தோண்டப்பட்டது. ஆனால் பள்ளம் தோண்டி ஒரு வருடத்திற்கு மேலாகியும் பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்