கழிப்பறை கட்டிடம் தேவை

Update: 2024-03-10 16:57 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே கண்ணாரப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கழிப்பறை அமைக்கப்படவில்லை. இதனால் இயற்கை உபாதையை கழிக்க மாணவ-மாணவிகள் மட்டுமின்றி ஆசிரியர்களும் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே மாணவர்கள் நலன் கருதி பள்ளி வளாகத்தில் கழிப்பறை வசதி அமைத்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்