தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்

Update: 2024-03-03 11:43 GMT

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள டி.நகர், தென்றல் நகர், மேரிஸ் நகர் வழியாக செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் செடிகள் முளைத்தும், பிளாஸ்டிக் கவர்கள், குப்பைகள் கொட்டப்பட்டும் தற்போது வாய்க்கால் தூர்ந்துபோன நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த கழிவுநீர் வாய்க்காலில் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்