கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-02-18 17:07 GMT
சின்னசேலம் பஸ் நிறுத்தம் அருகே போலீஸ் குடியிருப்பின் நுழைவு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்ந்துபோய் உள்ளது. இதனால் கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் கால்வாயில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே கழிவுநீர் வாய்க்காலை தூர்வாருவதோடு, போலீஸ் குடியிருப்புக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்