சாலையில் செல்லும் கழிவுநீர்

Update: 2024-02-11 13:19 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை போலீஸ் நிலையம் அமைந்துள்ள பகுதியில் கரூர்- திருச்சி பிரதான சாலை செல்கிறது. இச்சாலையோரம் பல்வேறு கடைகள் அமைந்துள்ளன. அந்த கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக கழிவுநீர் வழிந்து போலீஸ் நிலையம் செல்லும் வழியில் சாலையில் செல்கிறது. அடிக்கடி இது போன்ற நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்