கால்வாய் அமைக்க வேண்டும்

Update: 2024-01-21 17:34 GMT

வத்தலக்குண்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் தற்போது வரை கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வழிந்தோட வழியின்றி அந்த பள்ளத்தில் தேங்கி நிற்கிறது. எனவே கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்