கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2024-01-14 17:12 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சுற்றி வைக்கோல் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் பள்ளியை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்