வடிகால் வசதி வேண்டும்

Update: 2024-01-14 13:08 GMT

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியின் 40-வது வார்டு மலைக்கோவில் ஸ்ரீ லஷ்மி நகர் விஸ்தரப்பு பகுதியில்  ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் தற்போது பெய்த மழைநீர் வடிந்து செல்ல வழியின்றியும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்கள் செல்ல வழியின்றியும் காலி மனைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்