சாக்கடை கால்வாய் தூர்வார வேண்டும்

Update: 2024-01-07 17:33 GMT

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பெருமாகவுண்டம்பட்டி சஞ்சீவிராய பெருமாள் கோவில் எதிரே உள்ள சவுடேஸ்வரியம்மன் நகரில் உள்ள சாக்கடைகளில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகி உள்ளது. மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே சாக்கடையில் தண்ணீர் தேங்காமல் இருக்க சாக்கடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்