சென்னை வேப்பேரி, ஈ.வி.கே.சம்பத் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு முன்பு கழிவுநீர் ஆறுபோல ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் அதிகமாக துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் மாணவர்கள் இந்த பகுதியை கடந்து செல்வதால் அவர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கிய பகுதி என்பதால் மாநகராட்சி அதிகாரிகள் கழுவுநீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.