தேங்கி நிற்கும் தண்ணீர்

Update: 2024-01-07 12:01 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் கோட்டப்பாளையம் ஊராட்சியில் 2022-ம் ஆண்டு திட்டத்தில் செபஸ்தியார் கோவில் தெரு முதல் மேட்டூர் சாலை வரை வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டது. இந்த வடிகால் வாய்க்கால் முறையாக கட்டப்படாததால் இந்த வாய்க்காலில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்