சென்னை அண்ணாநகர், 102-வது வார்டு பாரதிபுரம் மூன்று தெருக்களும் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் மக்களால் நடமாட முடியவில்லை. அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. எனவே, மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெருக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.