ஆஸ்பத்திரி அருகில் கழிவுநீர்

Update: 2023-12-03 12:54 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி புதிய ராணுவ சாலையில் உள்ள அரசு ஆஸ்பத்திரி முன்புறம் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு மழை நீரும், கழிவு நீரும் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால், ஆஸ்பத்திரிக்கு வரும் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்