தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2023-10-29 15:38 GMT

பெருந்துறை ஒன்றியம் பெத்தாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 3-வது வார்டில் உள்ளது கொளத்தான்வலசு. இங்குள்ள சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படாததால் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. உடனே கால்வாயை சுத்தம் செய்ய அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்