சாலையில் தேங்கிய கழிவுநீர்

Update: 2023-10-29 15:13 GMT

காஞ்சிபுரம் மாவட்டம், 13-வது வார்டுக்குட்பட்ட பிள்ளையார் பாளையம் பாரதிநகர், கற்கீஸ்வரர் ஆலயத்தின் அருகே உள்ள சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் அவதிப்படுகின்றனர். மேலும், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கிய கழிவுநீரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்