சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்

Update: 2023-10-29 11:42 GMT

திருச்சி கிராப்பட்டி அன்பு விநாயகர் கோவில் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைபெய்யும்போது மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும், அன்புநகர், எலிமிநகர், சிம்கோ காலனி, எடமலைப்பட்டிபுதூர் உள்ளிட்ட மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் தொற்றும் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்