சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்

Update: 2023-10-22 14:01 GMT

புதுச்சத்திரம் ஊராட்சி பொம்மநல்லூர் அருந்ததியர் காலனியில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே விரைவில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்