சுகாதார சீர்கேடு

Update: 2023-09-24 17:53 GMT
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் கொசப்பாடி ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் பகுதியில் சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால் கழிவுநீர் தெருவில் குளம் போல் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதன் காரணமாக குடலை புரட்டும் அளிவிற்கு கடும் துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்களுக்கு பலவித தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தருவதோடு, சுகாதார பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்