சீரமைக்கப்பட்டது

Update: 2023-03-01 08:04 GMT


நாகர்கோவில் சிதம்பரம் நகர் சாலையோரத்தில் கழிவுநீர் ஓடையின் மீது அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்பு சேதமடைந்து காணப்பட்டது. இதனால், அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்து வந்தது. இதுபற்றி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சிலாப்பை அகற்றி விட்டு புதிய சிமெண்டு சிலாப்பை அமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

-கென்னடி ரோட்ரிகோ, கோட்டார்

மேலும் செய்திகள்