தூர்வாரப்படுமா?

Update: 2022-10-05 14:01 GMT

தூர்வாரப்படுமா?

நாகர்கோவில் சிதம்பரநகர் பகுதியில் சாலையோரத்தில் வடிகால் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஓடைகளை முறையாக பராமரிக்காததால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் ஓடையை தூர்வாரி தண்ணீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயந்தி, சிதம்பரநகர்.

மேலும் செய்திகள்