முழுமை அடையாத கால்வாய் பணி

Update: 2022-11-20 11:27 GMT

போளூர் தாலுகா சேத்துப்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட மடவிளாகம் கிராமத்தில் கடந்தசில மாதங்களாக கால்வாய் கட்டும் பணி நடந்தது. அந்தப் பணி இன்னும் முழுமை பெறவில்லை. கால்வாய் மேலே மூடி போடாமல் வைத்துள்ளனர். அதில் தேங்கும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய் மீது மூடி போட்டு மூட வேண்டும்.

-வெ.கோபி, மடவிளாகம்.

மேலும் செய்திகள்