சுகாதார சீர்கேடு

Update: 2023-12-03 17:42 GMT

சுகாதார சீர்கேடு

திருப்பூர் காலேஜ் ரோடு 25-வது வார்டு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள பாதாள சாக்கடையில் கசிவு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையில் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துடன் செல்ல வேண்டியுள்ளது. பலரும் முகத்தை மூடியபடி செல்கிறார்கள். சாலையில் கழிவுநீர் செல்வதால் வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறும் நிலை உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், திருப்பூர்.

மேலும் செய்திகள்