கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2023-04-09 19:17 GMT

கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலம் 13-வது வார்டு அவினாசி சாலை அனுப்பர்பாளையம்புதூரில் இருந்து 15 வேலம்பாளையம் செல்லும் வழியில் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது 2 வாரத்துக்கு ஒரு முறை இது போல் நடந்து கொண்டுள்ளது. பெட்ரோல் பங்கில் இருந்து வழிந்தோடும் கழிவறை தண்ணீர், கழிவுநீரால் பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மாநகராட்சி நிர்வாகத்திடமும் அதிகாரிகளிடமும் பலமுறை சொல்லியும் கண்டுகொள்ளாமல் அலட்சியப் போக்காக உள்ளனர். இதை சரிசெய்ய ஊர் பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

-கா. கருணாகரன் 15 வேலம்பாளையம்.

மேலும் செய்திகள்