ரோட்டில் ஓடும் கழிவுநீர்

Update: 2023-01-22 18:45 GMT

பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கந்தம்பாளையம் புதூர் என்ற ஊரில் சாக்கடை கழிவுநீ்ர் ரோட்டில் ஓடி வருகிறது. இதனால் ரோட்டில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவ வாய்ப்பு உள்ளது. ஆழ்துளை கிணற்றிலும் கழிவுநீர் கலந்து வருகிறது. உடனே கந்தம்பாளையம்புதூரில் சாக்கடை வடிகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்